திங்கள், 14 டிசம்பர், 2009

தமிழீழம் மலருமடா

சனி, 21 நவம்பர், 2009

மாவீரர் தின செய்தி

மானமுள்ள தமிழர்களே அழிகிறது தமிழ் ஈழம்
அழுகிறது தமிழ் இனம் என்று கண்ணீர் வடிப்பதை
நிறுத்துங்கள் இழந்த உயிர்களுக்கும் அழுத
கண்ணீருக்கும் விலையாக என்ன செய்ய போகின்றோம்

ஈழத்தின் விடிவுக்காய் உயிர்நீத்த எம்
மாவீரர்களுக்கு மகிமை படுத்த என்னசெய்ய போகின்றோம்
சற்று நினைத்து பாருங்கள் -எம் உறங்காத கண்மணிகள்
உறங்கி கொண்டிருக்கும் துயிலும் இல்லங்களில்
தூபம் ஏத்த முடியாத சூழல்
இப்படி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்

புலம் பெயர்ந்த உறவுகளே -மீளப் போகும்
தமிழ் ஈழத்தின் விடி வெள்ளிகளுக்கு
உங்கள் இல்லங்களில் தூபம் ஏற்றி
துயில் எழுப்புங்கள் -எம் மாவீரர் தினத்தையும்
புலிகளின் பலத்தையும் உலகம் அறியட்டும்
உலகத் தமிழரின் தாகம் -எப்போதுமே
தமிழ் ஈழ தாயகமாக அமையட்டும்
பிறவி

புதன், 4 நவம்பர், 2009

அண்டை நாடுகளே


அண்டை நாடுகளே
அண்டை நாடுகளே
அடிமையாய் வாழும்
தமிழருக்கு அடைக்கலம் கொடுங்கள்
சொந்த நாட்டில் -சோகமாய்

மடியும் அப்பாவி உயிர்களை
காக்க உதவுங்கள்


பாஸ்பரஸ் குண்டுகளால்
பற்றி எரியுது தமிழ் ஈழம்
எறிகணை வீச்சுக்களால்
சிதறிக்கிடக்குது தமிழன் உடல்கள்

ஐரோப்பா நாடுகளே
ஆசிய நாடுகளே
பேசிப்பலனில்லை யோசிக்கவும்
நேரமில்லை -எஞ்சியுள்ள
தமிழனுக்காவது கைகொடுங்கள்
பிறவி






ஈழத்தில் பாரதி

ஓடித் திரியாதே பாப்பா-வெடி
குண்டு உன்னை துரத்திடும் பாப்பா
கூடி விளையாடதே பாப்பா
கொத்து குண்டு உன்னை
கொன்றிடும் பாப்பா

கொத்தித் திரியுது சிங்கள காகம்
நீ பதுங்கு குழிகளில்
பதுங்க பலகிக்கொள்ளு பாப்பா
பச்சை வயலெங்கும் பாப்பா
தமிழன் ரத்த சகதியடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
தமிழ் ஜாதிகள் அழியிதடி பாப்பா

சத்தம் போடாதே பாப்பா-ஈழம்
மீளும் மட்டும் நித்தம்
இதுதானடி பாப்பா
பிறவி


இறைவா

குண்டு சத்தம் கேட்காத
என் பழைய நகரம்
என் மேசையில் மரண அவலம்
எழுதப்படாத நாளேடுகள்

இரத்தக் கரைப்படியாத
மணல் பரப்பு
யுத்தத்தின் சுவடுகள்
தோன்றாத தனிமைகள்
அமைதியான பகல் பொழுது
நான் நிம்மதியாய் உறங்கிய
ஓர் இரவு

பிணவாடை கலக்காத
கொஞ்சம் காற்று
பிரிவையே சந்திக்காத
என் உறவுகள்
இன்னும் இன்னம் யுத்தமே
இல்லாத எல்லாம் வேண்டும்
எனக்கு தருவாயோ இறைவா ?
பிறவி

இறைவா


ஓடிவிடுங்கள்

ஓடும் மேகங்களே -எங்கே
ஒழிந்து செல்கின்றீர்கள்
சலசலக்கும் நதிகளே -ஏனோ
சத்தமின்ரிக்கிடக்கின்றீர்கள்

பச்சை புல்வெளிகளே
சின்ன பனித் தூ ரல்களே
உச்சி ஆகாயமே -அதில்
வாழும் வண்ணத் தாரகைகளே
நீங்களும் ஏனோ
நிலை குலைந்து நிற்கின்றீர்கள் .......

ஈழத் தமிழனுக்குதான்
இந்த நிலை என்றால்
உங்களையும் விடவில்லையோ
அந்நியனின் பார்வையது

ஈழத்தின் இயற்கைகளே -பொழுது
புலர்வதுக்குள் எங்காவது ஓடி விடுங்கள்
கயவர் கையில் மாட்டினால்
நீங்களும் கற்பு இழந்ததுதான்
கதறி அழ நேரிடும்


பிறவி





ஓடிவிடுங்கள்

ஓடிவிடுங்கள்

திங்கள், 2 நவம்பர், 2009

ஈழத்தாய்க்கு

பச்சைக்குழந்தை அம்மா நான் -நீ
பெற்ற வீரப்புதல்வனமா -விம்மி
நெஞ்சு துடிக்குதம்மா -வன்னி மண்ணில்
குண்டு வெடிக்குதம்மா

உறவுகள் எங்கோ தொலைந்ததம்மா
எம் உணர்வுகள் செத்து மடிந்ததம்மா
உரிமை இழந்தவன் தமிழனம்மா
இதை வென்று கொடுப்பவர் யாரம்மா

மீண்டும் அமைதிக்காற்று வீசுமா
என்னை சுமந்தவளே நீ
சொல்லம்மா
பிறவி
971532849